டெல்லி கலவரம்: பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் இணைந்த 2 வயது பெண் குழந்தை

மதக் கலவரத்தின்போது இந்தக் குழந்தை தனது பெற்றோரிடம் இருந்து பிரிந்ததை ஊடகச் செய்திகள் மூலம் மகளிர் ஆணையம் அறிந்தது.


ஒருவேளை குழந்தையின் பெற்றோரை கண்டறிய முடியாவிட்டால், தாம் அக்குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாக டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரின் தனிச் செயலர் சவிதா ஆனந்த் விருப்பம் தெரிவித்திருந்தார்.


பின்னர் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் மற்றும் உறுப்பினர் ஃபிர்தௌஸ் கான் ஆகியோர் அக்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க ஆணையத்தின் 'மகிளா பஞ்சாயத்து' குழுவினரை அறிவுறுத்தினர்.


அந்தக் குழந்தை கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான முஸ்தஃபாபாத் பகுதியில், கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களின் முகாமில் வசிக்கும் சுகானி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண்ணுடன் வசித்து வந்தது.